கடலூரில் குடிநீர் விநியோகம் ரத்து

புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என கடலூர் பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.

புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என கடலூர் பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சியில் ஒன்று முதல் 7 வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய குழாய்களை பதிக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் காரணமாக வருகிற புதன்கிழமை (செப்.12) வரை இரண்டு நாள்களுக்கு அந்தப் பகுதிகளில் குறிப்பாக எஸ்.என்.சாவடி, செம்மண்டலம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 13-ஆம் தேதி முதல் வழக்கம் போல குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com