இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டம்

விருத்தாசலத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 

விருத்தாசலத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், காடாம்புலியூரில் உள்ள தாமரைக் குளத்துக்கு சுற்றுவேலி அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி புதன்கிழமை (செப்.12) ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற 30-ஆம் தேதி  திருவண்ணாமலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com