சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் உலக தற்கொலை தடுப்பு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
துறைத் தலைவர் ஆர். பாபு தலைமை வகித்தார். பல்கலைக்கழக பொறியியல் துறையைச் சேர்ந்த கார்த்திகா பிரகதீஸ்வரி (பிரம்மகுமாரி), சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தற்கொலை எண்ணத்தை தவிர்க்க மனநலம் மிகவும் முக்கியம் என்றார். விழாவை முனைவர் சு.குலசேகரப் பெருமாள் பிள்ளை தொடக்கி வைத்தனர். சு. கலைவாணி வரவேற்றார். கி.சாய்லீலா நன்றி கூறினார்.