மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

சங்கொலிக்குப்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

சங்கொலிக்குப்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
 கடலூர் அருகே காரைக்காடு அங்காளம்மன் நகரைச் சேர்ந்த அஞ்சாப்புலி மகன் சிவா (18). இவர் சங்கொலிக்குப்பத்தில் உள்ள மைக் செட், சீரியல் செட் கடையில் வேலை செய்து வந்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை இரவு சங்கொலிக்குப்பம் திரெüபதியம்மன் கோயிலுக்கு சீரியல் செட் அமைக்கும் பணியில் சிவா ஈடுபட்டிருந்தார். அப்போது கோயிலுக்கு அருகே உள்ள மின்கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com