வடலூர் அருகே உள்ள கருங்குழி ஏரிஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அறிவுத் தமிழ் இலக்கிய மன்ற விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ச.தியாகராஜன் தலைமை வகித்தார். கவிஞர் உடையார் கோவில் குணா முன்னிலை வகித்துப் பேசினார். ஏரிஸ் கல்விக் குழுமத் தலைவர் சி.டி.அறிவழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். முனைவர் ஜானகிராஜா தமிழின் சிறப்புகளை விளக்கிப் பேசினார்.
நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் சு.கலைவாணி, மு.ஜெயப்பிரியா ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியர் மு.சுந்தரபரணி
நன்றி கூறினார்.