பாஜக நிர்வாகிகள் கூட்டம்

பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் புதுப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக சார்பில், சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் புதுப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலர் ஆர்.எம்.செல்வகுமார் தலைமை வகித்தார். தொரப்பாடி மகாசக்தி கேந்திரம் மண்டலத் தலைவர் என்.கணேசன், பண்ருட்டி நகரத் தலைவர் எம்.செல்வம், நெல்லிக்குப்பம் நகரத் தலைவர் எஸ்.கே.செந்தில்குமார், மகா சக்தி கேந்திரப் பொறுப்பாளர்கள் ஜெ.சந்திரன், சி.தமிழரசன், என்.சந்திரபாபு, என்.ரவிராஜன், கே.அரிகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் என்.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொரப்பாடி நகர பொதுச்செயலர் பி.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் தேவ.சரவணசுந்தரம் பங்கேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், தூய்மை இந்தியா திட்டத்தை முறையாக செயல்படுத்தாத தொரப்பாடி பேரூராட்சியை கண்டிப்பது, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் அமைக்கப்படாமல் நிலுவையில் உள்ள மின்மாற்றிகளை விரைந்து அமைக்க கோருவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com