குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவர் ந.முத்துக்குமார். இவர், 2017-18-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, மாணவர் முத்துக்குமாருக்கு காமராஜர் விருது வழங்கினார். விருது பெற்ற மாணவர் ந.முத்துக்குமாரை, திருவள்ளுவர் கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி, முதல்வர் வி.ராம்நாத், துறைத் தலைவர் ஆர்.தினேஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.