பணிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் கிருபாகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மழை நீர் சேமிப்பு முறைகள், அதன் பயன்கள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் மும்மொழிகளில் பேசினர். மேலும், நீரின் அவசியத்தை நாடகம் மூலம் நடித்துக் காட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.