வட்டாட்சியர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

திட்டக்குடி வட்டாட்சியர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியரை பொதுமக்கள்


திட்டக்குடி வட்டாட்சியர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டாட்சியரை பொதுமக்கள்
சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திட்டக்குடி வட்டாட்சியராக செயல்பட்டு வந்தவர் பா.சத்தியன். இவர் மாற்றப்பட்டு, கடலூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இதற்கு, திட்டக்குடி பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை பணி நிமித்தமாக விருத்தாசலம் கோட்டாட்சியர் ச.சந்தோஷினி சந்திரா திட்டக்குடிக்கு வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் அங்குவந்து, கோட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தகவலறிந்த திட்டக்குடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கோட்டாட்சியரை மீட்டனர்.
திட்டக்குடி வட்டாட்சியராக செயல்பட்ட பா.சத்தியன், 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பிலிருந்த வைத்தியநாதசுவாமி கோயில் குளத்தை மீட்டது, கொடிக்களம் பெரிய ஏரியை கண்டறிந்து, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அந்தப் பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்.
இந்த நிலையில், அவர் மாற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com