பள்ளி ஆண்டு விழா

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் கல்விக் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கிட்ஸி இன்டர்நேஷனல் ப்ளே பள்ளியில் முதலாமாண்டு விழா,

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் கல்விக் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கிட்ஸி இன்டர்நேஷனல் ப்ளே பள்ளியில் முதலாமாண்டு விழா, பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கலைமகள் கல்விக் குழும நிறுவனர் வீர.முத்துக்குமரன் தலைமை வகித்தார். தாளாளர் மு.பரணிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக காட்டுமன்னார்கோவில் 
காவல் ஆய்வாளர் டி.ஷியாம்சுந்தர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலியபெருமாள், அரிமா சங்க நிர்வாகிகள் சேனாதிபதி, ராஜா, ரவி, சிவகுருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மாணவர்களுக்கு பட்டமளித்து  வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைமை ஆசிரியர்  மாணிக்கசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com