விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள் திருட்டு

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள்  திருடுபோயின. 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகள்  திருடுபோயின. 
திட்டக்குடி அருகே தொழுதூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் முன்புறம் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது.  வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.7 ஆயிரம் பணம்  திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com