குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பறக்கும்படை குழுவினர் குறிஞ்சிப்பாடி - குள்ளஞ்சாவடி சாலையில் ஆயிர்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில், விருத்தாசலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை, வடலூர் பிரதான சாலையில் வசிக்கும் வங்கி ஊழியர் எஸ்.குணசேகரன் (48) என்பவர், வங்கி வாகனத்தில் ரூ.51.50 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது.
அந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.