சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரும் "லேட்டரல் என்ட்ரி' முறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கு டேன்செட் (TANCET) மூலம் சேர்க்கை நடைபெறுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.