போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

சிதம்பரத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள மேல்புவனகிரியை சேர்ந்த செல்வம் மகன் சூரியமூர்த்தி (25). முடிதிருத்தும் தொழில் செய்து வந்த இவர், சிதம்பரத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் 17 வயது மாணவியை காதலித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து அந்தப் பெண்ணின் தாயார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகர போலீஸார் இருவரையும் மீட்டு, இளம்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சூரியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com