சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவிகள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு குறு நாடகத்தை அண்மையில் நடத்தினர்.
பள்ளியின் அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நாடகத்தில், நமது பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்கள், புதிய இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த குறு நாடகத்தை மாணவிகள் நடத்தினர். தலைமை ஆசிரியர் வே.மணிவாசகம் நாடகத்தை தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் வேளாண் ஆசிரியை கே.சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ பிரதிநிதி ல.யாழினி நன்றி கூறினார்.