கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, செவ்வாய்க்கிழமை இரவிலும் பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 24.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம்: குப்பநத்தம் 19.6, விருத்தாசலம் 13.2, குறிஞ்சிப்பாடி 9, குடிதாங்கி 7.5, புவனகிரி, பரங்கிப்பேட்டை, வடக்குத்து தலா 6, பெலாந்துறை, வானமாதேவி தலா 5.4, பண்ருட்டி 4, அண்ணாமலை நகர் 3.2, லால்பேட்டை 2 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடலூரில் லேசான தூறல் மழை பெய்தது.