எரிவாயு உருளை வெடித்ததில்  3 பேர் காயம்

சிதம்பரத்தில் உணவு விடுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 3 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.

சிதம்பரத்தில் உணவு விடுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 3 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள தனியார் உணவு விடுதியில் வெள்ளிக்கிழமை காலை எரிவாயு உருளையை பற்ற வைக்கும்போது வெடித்துச் சிதறியது. 
இந்த நிகழ்வில், கடை உரிமையாளர் கூத்தன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் (40), பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவி ( 32 ), கொடியாழம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 
இவர்கள் சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com