தமிழ்நாடு குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கக் கூட்டம், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி, செயலர் கே.குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் டி.சாமிதுரை, செயலர் கே.ராஜேந்திரன், பொருளாளர் வை.பரமசிவம், துணைத் தலைவர் ஆர்.பூமணி, துணைச் செயலர் ஏ.அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமர், பி.டி.ஓ. (ஓய்வு) பெ.ஆனந்ததுரை, பி.டி.ஓ.க்கள் வி.ஆர்.எஸ்.சீனுவாசன், எல்.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை கடலூரில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் மண்டல மாநாட்டில் வலியுறுத்துவது என தீர்மானித்தனர்.