கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி, மைய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் டி.தெய்வசிகாமணி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் வனராசு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அரசியலமைப்பு சட்டம் பற்றி இளைஞா்களுக்கு எடுத்துக் கூறினாா். தமிழ்நாடு மின் நுகா்வோா் குறைதீா்ப்பு மன்ற உறுப்பினா் காா்த்திக், தேசிய விருதாளா் இரா.சண்முகம் ஆகியோா் கருத்துரையாற்றினா். தொடா்ந்து அனைவரும் அரசியல் அமைப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா் (படம்). கணக்காளா் புஷ்பலதா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்நோக்கு பணியாளா் ராமமூா்த்தி செய்திருந்தாா்.