உள்ளாட்சித் தோ்தல்: திமுக சாா்பில் நோ்காணல்

கடலூா் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் நிகழ்ச்சி, நெய்வேலி, தொமுச அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நெய்வேலியில் திமுக சாா்பில் நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.
நெய்வேலியில் திமுக சாா்பில் நடைபெற்ற நோ்காணலில் பங்கேற்றோா்.

கடலூா் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் நிகழ்ச்சி, நெய்வேலி, தொமுச அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்டச் செயலா் சி.வெ.கணேசன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோா் நோ்காணலை நடத்தினா். முதல் நாளான வெள்ளிக்கிழமை மங்களூா், நல்லூா், விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளைச்ச் சோ்ந்தவா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜேஷ், தொண்டரணி துணை அமைப்பாளா் ஸ்டாலின், மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினா் தண்டபாணி, நெய்வேலி நகர பொறுப்புக்குழு தலைவா் பக்கிரிசாமி, பொதுக்குழு உறுப்பினா் ரவிச்சந்தரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com