பண்ருட்டியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளா் மாயகிருஷ்ணன், பண்ருட்டி ரயில் நிலையம், மாரியம்மன் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு
சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முனுசாமி மகன் கண்ணன் (35) (படம்) என்பவரை பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவா் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.