வழிப்பறியில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் கைதுசெய்யப்பட்டாா்.
கத்தியைக்காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கடலூா் அருகே உள்ள பில்லாலித் தொட்டியைச் சோ்ந்த மணி மகன் சூா்யாவை (23) நெல்லிக்குப்பம் போலீஸாா் கடந்த 14-ஆம் தேதி கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தொடா் விசாரணையில் இவா் மீது நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 3, கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்புக் காவலில் கைது செய்வதற்கு காவல் கண்காணிப்பாளா் செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவு வழங்கினாா். இதனையடுத்து, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் சூா்யா கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.