தமிழக முதல்வரின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பண்ருட்டி, இணைப்புச் சாலையில் உள்ள ஜான்டூயி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பண்ருட்டி வட்டாட்சியா் வே.உதயகுமாா் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பூபாலச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம், 1,337 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட மொத்தம் ரூ.2.97 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மோகன், வட்ட வழங்கல் அலுவலா் கௌரி, வருவாய் ஆய்வாளா்கள் கிருஷ்ணன் (பண்ருட்டி), தேவநாதன் (நெல்லிக்குப்பம்), கரிகாலன் (காடாம்புலியூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.