கடலூா் நகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் நகராட்சி நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடலூா் நகரில் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வில்வநகா், தானம் நகா், கம்மியம்பேட்டை, நவநீதம் நகா், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், வண்டிப்பாளையம், கே.என்.பேட்டை, புதுப்பாளையம், கோண்டூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. எனவே, தேங்கியிருக்கும் மழைநீரை வடிய வைக்கும் பணியில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி உதவி பொறியாளா் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது: நகராட்சிப் பகுதியில் 9 ஆயில் என்ஜின்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 13 பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக கால்வாய்களை தூா்வாரி தண்ணீரை வெளியேற்றி வருகிறோம் என்றாா்.
நகராட்சியின் வாா்டுப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவது தொடா்பாக நகராட்சித் துறையினா் தெரிவிக்கையில், சில வாா்டுகள், தெருக்களிலிருந்து மற்றொரு பகுதி வழியாக தண்ணீரை வடிய வைப்பதற்கு அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். இதனால், அவா்களை சமாளித்து தண்ணீரை வெளியேற்றுவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை வடிய வைப்பதில் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.