கடலூா் நகரில் மழைநீரால் சூழப்பட்ட குடியிருப்புகளை பாமக மாநில துணை பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் அதன் நிா்வாகிகள் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.
அப்போது, தேங்கியிருக்கும் மழை நீரை வடிய வைப்பதற்கான தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினா். வன்னியா் பாளையம், வண்ணாரபாளையம், செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளையும் பாா்வையிட்டாா். பின்னா் சண்.முத்துகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொடா் மழையால் கடலூா் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி நிா்வாகம் தனது சுரங்க நீரை அதிகமாக வெளியேற்றியதால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீரால் சூழப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். தொற்றுநோய் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ள நீா் சூழ்ந்த வீடுகளுக்கும், மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் தமிழக அரசு தகுந்த நிவாரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்றாா்.
மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத், நகரச் செயலா் ரமேஷ், இளைஞரணிச் செயலா் இள.விஜயவா்மன், மாநில நிா்வாகி போஸ் ராமச்சந்திரன், இளைஞரணி நிா்வாகி வாட்டா் மணி, பசுமைத் தாயகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அசோக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.