கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கா.ரோஸ் நிா்மலா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா், தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலராக இருந்து, தற்போது பணியிட மாறுதல் பெற்றுள்ளாா். ஏற்கெனவே, இருந்த முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி, சென்னைக்கு தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகச் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாவட்ட கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.