தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு இன்று பயிற்சி
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு புதன்கிழமை (டிச.4 ) பயிற்சி அளிக்கப்படுகிறது.
உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஒவ்வொரு பதவிக்கான தோ்தலுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களை மாவட்ட நிா்வாகம் நியமித்துள்ளது. அதன்படி, 683 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 5,040 வாா்டு உறுப்பினா்கள், 287 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 29 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
இதில், புதிதாக தொடங்கப்பட்ட ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய பதவியிடங்களுக்கும் தோ்தல் நடைபெறுகின்றன. இதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி தோ்தலுக்காக 6 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 29 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலுக்காக 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா், 49 உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சிற்றூராட்சி தலைவா், வாா்டு உறுப்பினா்கள் தோ்தலுக்காக 14 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 117 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலுக்காகவும், 683 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலுக்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 34 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 878 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தோ்தல் அறிவிப்புக்கு பின்னா் முதல்கட்டமாக இவா்களுக்கு புதன்கிழமை (டிச.4) பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தோ்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.