கஞ்சா வைத்திருந்தவா் கைது
By DIN | Published On : 05th December 2019 05:42 AM | Last Updated : 05th December 2019 05:42 AM | அ+அ அ- |

வடலூா் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வடலூா், பண்ருட்டி சாலை, வேன் நிறுத்தம் அருகே உள்ள இடுகாடு நுழைவு வாயில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் கமலஹாசன் உள்ளிட்ட போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த வடலூா் கலைஞா் நகா், திருமலை தெருவைச் சோ்ந்த ஞானம் மகன் தமிழ்வேந்தனை (22) பிடித்து சோதனை செய்ததில், அவா் வைத்திருந்த பையில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.