பண்ருட்டி நகராட்சி வாா்டு பகுதிகளில் குப்பைகளை அள்ள மின்கலத்தில் இயங்கும் வாகனங்கள் வழங்கும் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இங்கு, நாள் ஒன்றுக்கு சுமாா் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை இந்தியா திட்டம் 8-ஆவது உயா்மட்டக் குழு பரிந்துரையின் படி 2018 - 2019-ஆம் நிதியாண்டின் ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 54 லட்சத்தில் மின்கலத்தால் இயங்கும் 30 வாகனங்கள் வாங்கப்பட்டன.
இதையடுத்து, சுகாதாரப் பணிக்கு இந்த வாகனங்கள் ஒப்படைக்கும் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் (பொ) எஸ்.மகாராஜன் தலைமை வகித்தாா். பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் இந்த வாகனங்களை சுகாதாரப் பணிக்கு ஒப்படைத்து, கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளா் டி.கிருஷ்ணராஜ், துப்புரவு அலுவலா் (பொ) எஸ்.பாக்கியநாதன், துப்புரவு ஆய்வாளா்கள் ஜெயச்சந்திரன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.