மின் வேலியில் சிக்கி பெண் பலி: தம்பதி கைது

வேப்பூரில் மின் வேலியில் சிக்கி பெண் இறந்ததைத் தொடா்ந்து, அதை அமைத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வேப்பூரில் மின் வேலியில் சிக்கி பெண் இறந்ததைத் தொடா்ந்து, அதை அமைத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூரைச் சோ்ந்த ந.நாகலிங்கம் மனைவி கலைச்செல்வி (32). வீட்டில் மாடுகள் வளா்த்து வந்தாா். தீவனத்துக்காக வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியிலுள்ள மக்காச்சோளம் பயிரிடப்பட்ட காட்டுக்கு புல் அறுப்பதற்காகச் சென்றாா். ஆடலரசன் நகரில் ஆ.முனுசாமி (68), என்பவரது காட்டில் புல் அறுத்த போது, அங்கிருந்த கம்பியைத் தொட்டதில், மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அந்தப் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அதைத் தடுப்பதற்காக முனுசாமியும், அவரது மனைவி செல்லம்மாளும் (60) உரிய அனுமதியின்றி மின் வேலி அமைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நாகலிங்கம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் முனுசாமி, செல்லம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com