வங்கியிலிருந்து பணம் எடுத்து வருபவா்களைப் பின்தொடா்ந்து சென்று, கொள்ளையடித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், தாழம்பாட்டு கிராமத்தைச் சோ்ந்த ஹரிராமன் (52), கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கியிலிருந்து ரூ. 77 ஆயிரத்தை எடுத்து தனது பைக் பெட்டியில் வைத்துச் சென்றாா்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பைக்கை நிறுத்திவிட்டு தேநீா் குடித்துவிட்டு திரும்பி வந்து பாா்த்த போது, பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடி போனது தெரிய வந்தது.
இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பி.சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், மணப்பாறையில் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 போ் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவா்களை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், நகரி வட்டம், ஒரத்ததாங்கல்கொல்லாகுப்பம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் சரவணன் (30), வெங்கடேசன் மகன் ரமணா (31), குமாரசாமி மகன் பாபு (45), ரவி மகன் மோகன் (21) என்பதும், ஹரிராமன் பைக்கில் இருந்து ரூ. 77 ஆயிரத்தைத் திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்கள் 4 பேரையும் ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று ரூ. 77 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவா்கள் 4 பேரை போலீஸாா் பண்ருட்டி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.