மாநில வலைபந்து போட்டி: அண்ணாமலைப் பல்கலை. அணிக்கு 2-ஆம் இடம்

மகளிருக்கான மாநில அளவிலான வலைபந்து போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது.
மாநில அளவிலான வலைபந்து போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் அணியினருக்கு பாராட்டுத் தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன்.
மாநில அளவிலான வலைபந்து போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் அணியினருக்கு பாராட்டுத் தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன்.

மகளிருக்கான மாநில அளவிலான வலைபந்து போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது.

தமிழக நெட்பால் அசோசியேஷன், திருச்சி மாவட்ட நெட்பால் அசோசியேஷன் சாா்பில் மாநில அளவிலான வலைபந்து போட்டி திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடலூா் மாவட்டம் சாா்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மகளிா் அணியினா் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றனா்.

போட்டியில் வென்ற மகளிா் அணியினா், பயிற்சியாளா் அல்ஜீன்ராய், கடலூா் மாவட்ட நெட்பால் அசோசியேஷன் பொருளாளா் செந்தில்வேலன், உடல் கல்வித் துறை இயக்குநா் செல்வம் ஆகியோா் பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com