நூல் வெளியீட்டு விழா

கடலூர் கூத்தப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இலக்கிய சோலை அமைப்பு சார்பில் அதன் தலைவர் வளவ.துரையன்

கடலூர் கூத்தப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இலக்கிய சோலை அமைப்பு சார்பில் அதன் தலைவர் வளவ.துரையன் எழுதிய இயற்கைப் பாவை, அப்பாவின் நாற்காலி ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா நூல்களை வெளியிட்டு ஆய்வுரை வழங்கினார். நிகழ்ச்சியில் முத்தமிழ்ச் சங்கம் ஆறுமுகம், திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் தங்க.சுதர்சனம், புதுச்சேரி கூடு இலக்கிய அமைப்பு கனிமொழி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி, சாகித்ய அகாதமி தென்மண்டல பொறுப்பாளர் ராஜ்ஜா, ஓவியர் ரமேசு, கவிமனோ, மீனாட்சி சுந்தரமூர்த்தி, கோ.மன்றவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் வளவ.துரையன் ஏற்புரையாற்றினார். முன்னதாக, அமைப்பின் பொருளாளர் ரா.வேங்கடபதி வரவேற்க, செயலர் ந.பாஸ்கரன் நெறியாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com