பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி சமேத சரநாராயணப் பெருமாள் கோயிலில் ரதஸப்தமி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு திருவராதனம், 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவம், விசேஷ திருமஞ்சனம், 10 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.