பண்ருட்டி அருகே விஷ சாராயம் பதுக்கியதாக பெண் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை அருகே விஷச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புதுப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் போலீஸார், தொரப்பாடி, மாளிகைமேடு கிராமத்தைச் சேர்ந்த உமையாள் (55) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, உமையாளை கைது செய்தனர்.