சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு - புத்தாக்க நிறுவனம் சார்பில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முனைவர் ஆர்.அறிவழகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் என்.சாந்தி சிறப்புரையாற்றினார். பேராசிரியர் புகுத்தெழினி, ஆர்.கவிதா, ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பேராசிரியர் ஆர்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.