கட்டாயக் கல்வி குறித்த வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுற்றம்- சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குமராட்சி வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு குமராட்சி வட்டார வள மைய அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரா.பாலமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் டி.தமிழ்மணி, ஜெயக்குமார் ஜான்சன், ராஜசேகர் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.