கடலூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்து, உடல் பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் ரத்த பரிசோதனை, இசிஜி, சர்க்கரை நோய் போன்ற சோதனைகள் மேற்கொள்ளபபட்டு அதனடிப்படையில் எலும்பு உறுதி சோதனை, இருதயம், கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் பாண்டுரங்கன், கேசவன், முகுந்தன் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். இதில், காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் 225 பேர் சிகிச்சை பெற்றனர்.