கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அனைத்து விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திறந்திருக்கும் என்று கடலூர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டது.
எனவே, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.