விவசாயி மர்மச் சாவு

குள்ளஞ்சாவடி அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

குள்ளஞ்சாவடி அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தார். 
 குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அப்பியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (48), விவசாயி. இவருக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர். திங்கள்கிழமை இரவு சேகரும், அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவரும், அம்பலவாணன்பேட்டையில் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பாஸ்கர் வீட்டின் பின்புறம் தலையில் காயத்துடன் சேகர் இறந்து கிடந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து சேகரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கர், அன்பரசன் ஆகியோர் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவான இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com