சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுரை

சாலை விதிகளை மதித்து பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்தாரக்குப்பம் போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை அறிவுரை வழங்கினர்.

சாலை விதிகளை மதித்து பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்தாரக்குப்பம் போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு புதன்கிழமை அறிவுரை வழங்கினர்.
கடலூர் மாவட்டக் காவல் 
கண்காணிப்பாளர் ப.சரவணன் 2019-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். 
இதையடுத்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன விபத்துகள், சாலை வீதி மீறல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த நிலையில், புதன்கிழமை மந்தாரக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள், இருக்கை பட்டை அணியாத வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி, அறிவுரைக் கூறி, சாலை விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும், மறுமுறை தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com