தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம்

மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் பகுதிகள் வழியாக மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் செல்கின்றன. இவ்வாறு செல்லும் லாரிகள் மணலைத் தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்கின்றன.
இவை, நெடுஞ்சாலையிகளில் வேகமாகச் செல்லும் போது, காற்றில் பரந்து வரும் மணல் துகள்கள், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண், முகத்தில் வேகமாகத் தாக்குவதால் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளாகும் சூழல் உள்ளது.
நீண்ட தொலைவு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான பாரத்துடன் செல்கின்றன. மணல், கிராவல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், அவை காற்றில் பறக்காமல் இருக்க தார்ப்பாயைப் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும். 
ஆனால், பெரும்பாலான லாரிகளில் அவ்வாறு தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்வதில்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்லும் மணல், கிராவல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com