பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடநூல் விநியோகம்

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் பாட நூல்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் பாட நூல்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி செயலர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, தமிழ் வழியில் படிக்கும் 900 மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கும் 360 மாணவர்கள் என மொத்தம் 1,260  பேருக்கு பாடநூல்கள் உள்ளிட்ட தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
விழாவில், தலைமையாசிரியர் எஸ்.இளங்கோ, தமிழாசிரியர் ஆர்.செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், ராஜேந்திரன், உதவி ஆசிரியை டி.பூர்ணிமாதேவி, ஆசிரியர்கள் நவமணி, குணசேகரன், பழனிவேல், எம்.நாராயணன், விஜயபூபாலன், சசிகலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com