தன்னிலை அறிதல் மருத்துவ முகாம்

கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, திட்டக்குடி அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் சார்பில்

கடலூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு, திட்டக்குடி அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் சார்பில் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் "தன்னிலை அறிதல்' மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 முகாமுக்கு வட்டாட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி வரவேற்றார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தொழில்நுட்ப அலுவலர் விபின் மாதவி முகாமை தொடக்கி வைத்துப்பேசினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன் எய்ட்ஸ் நோய் பரவும் முறை, தற்காப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள் குறித்து வருவாய்த் துறை ஊழியர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
 தொடர்ந்து, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். செவிலியர் தபிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் பூவராகன், சங்கர், ஆலோசகர் தொல்காப்பியன், ஆய்வகநுட்பர் கவிதா, ஹரிபாஸ்கர், குமார், அரிமா மாவட்டத் தலைவர் சண்முகம்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com