குழந்தையுடன் பெண் மாயம்

நெய்வேலி அருகே குழந்தையுடன் வெளியே சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என அவரது கணவர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.


நெய்வேலி அருகே குழந்தையுடன் வெளியே சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என அவரது கணவர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
நெய்வேலியை அடுத்துள்ள ஊ.மங்கலம் காவல் சரகம், ஊத்தங்கால் பழைய காலனியில் வசிப்பவர் சுரேஷ் (31). இவரது மனைவி நந்தினி (23). இவர்களுக்கு தனுஷ்கா (7), ரித்திகா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த சுரேஷ் கடந்த மாதம் ஊர் திரும்பினார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை குழந்தை ரித்திகாவுடன் வெளியே சென்ற நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். 
இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com