சிதம்பரம் மாரியம்மன்கோயில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பி.கலியபெருமாள் (82) ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர்கள் சிவராஜ்குமார், பீக்கர் ஆகியோர் செய்தனர்.