தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: வடலூர் தெய்வ நிலையத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தெய்வ நிலைய செயல் அலுவலர் ரா.கருணாகரன் தலைமையில், தெய்வ நிலைய பூசகர்கள் சன்மார்க்க முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டனர். 
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சன்மார்க்க சங்கம் செளந்தரராஜன், தெய்வ நிலைய கணக்கர் .த.ஞானபிரகாசம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, வள்ளலார் தெய்வ நிலையத்தில் வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றமும், 21-ஆம் தேதி ஜோதி தரிசனப் பெருவிழாவும் நடைபெற  உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com