பண்ருட்டியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி லட்சுமிபதி நகரில் உள்ள வடகைலாசம் கூட்டுறவுச் சங்கத்தின் 2-ஆம் எண் நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களுடன், ரூ.1,000 ரொக்கப் பணத்தையும் வழங்கினார்.
முன்னதாக, கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் ராம்குமார், சரஸ்வதி கோவிந்தன், துணைத் தலைவர்கள் வேலு, சத்யா ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ராஜதுரை, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ரமாதேவி ராமலிங்கம், கூட்டுறவு சங்கச் செயலர் (பொறுப்பு) குணா, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.