ராமநத்தம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த சே.அறிவழகி (40) மகள் சினேகா (16). தொழுதூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்1 வகுப்பு படித்து வந்தார்.
இவர், அடிக்கடி செல்லிடப்பேசியை பயன்படுத்தினாராம். இதனை அறிவழகி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா, கடந்த 3-ஆம் தேதி
தீக்குளித்தார். இதில், காயமடைந்தவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார்.