திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கலைஎழிலன் வரவேற்றார்.
நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.நீதிமன்னன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
விழாவில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 235 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், வங்கி இயக்குநர் ராமர் உள்பட பலர்
பங்கேற்றனர்.